முத்தமிடத் தொடங்குகையில்
மீசை முந்திக்கொண்டு விட்டது !
அதற்கும் உன்மேல் கொள்ளை
ஆசையடி !!
.
மீசையின் குறுகுறுப்பை
ரசிக்க தெரியாதவளுக்கு
முத்தம் கொடுத்து
என்ன பயன் ??!!
.
"தன்னைப்பாராமல் இதழிலேயே முத்தமிடுவதால்
குத்தி காயப்படுத்துகிறதுன் மீசை "சொன்னேன் நான்
"நீ இல்லாத போதும் உன் வாசனைக்காய்
உன்னை நுகர்ந்து வைத்துக்கொள்ள
சொன்னவனே நான் தான் " சொன்னான் அவன் !!
.
உன் கூந்தலை நுகரும்
போதெல்லாம் என்
மீசை வளரத்துடிப்பதை
எப்படி சொல்வேன்
உன்னிடம் !??